திருகோணமலையில் 4 மாத குழந்தையின் தாய் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

Trincomalee Norway Sri Lanka Police Investigation
By Laksi Jul 26, 2024 10:03 AM GMT
Laksi

Laksi

திருகோணமலையில் ஐரோப்பிய நாட்டு குடியுரிமை பெற்ற இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (25)  திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு

தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு

பொலிஸாரின் விசாரணை

இந்த நிலையில், குறித்த பெண் நோர்வே நாட்டில் வசித்து வந்ததாகவும் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து திருகோணமலையில் கணவனுடன் வசித்து வந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் 4 மாத குழந்தையின் தாய் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு | Norwegian Woman Dies In Trincomalee

அத்தோடு,  குடும்பமாக நோர்வே நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் அறிமுகமாகும் ஒன்லைன் விசா முறை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் அறிமுகமாகும் ஒன்லைன் விசா முறை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW