நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Oct 08, 2024 02:46 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

காத்தான்குடி மாணவியின் புது முயற்சி

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை | Thunderstorms In Many Parts Of The Country

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்! இருவர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்! இருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW