பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்! இருவர் உயிரிழப்பு

Pakistan China World
By Harrish Oct 07, 2024 09:54 PM GMT
Harrish

Harrish

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மின் உற்பத்தி விநியோக நிறுவனத்தில் பயணியாற்றி வரும் சீன நாட்டினரை குறிவைத்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகள் அவ்வபோது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றன.

தாக்குதல் சம்பவம்

இந்நிலையில், நேற்று(07) கராச்சியில் உள்ள மின் உற்பத்தி விநியோக நிறுவனத்தில் பயணியாற்றி வரும் சீன ஊழியர்கள் பயணித்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 2 சீனர்கள் உயிரிழந்ததுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்! இருவர் உயிரிழப்பு | Terrorist Attack Killed Chinese Karachi Airport

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவம் கராச்சி விமான நிலையத்தின் அருகே இடம்பெற்றுள்ளதுடன் இந்த தாக்குதலை பலூசிஸ்தானை சேர்ந்த கிளர்ச்சிக்குழு மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.