ரணிலை ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும்: எம்.ஆர்.எம் பைசால் வேண்டுகோள்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 27, 2024 10:56 AM GMT
Laksi

Laksi

வீழ்ச்சியடைந்த நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டு வந்துள்ள ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும் என முஸ்லிம் இடது முன்னணியின் பொதுச் செயலாளர் எம் ஆர் எம் பைசால் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டை அபிடிவிருத்தி செய்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும். அதற்கான வேலைத்திட்டங்களும் அவரிடம் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்ட காலமாக முஸ்லிம் இடதுசாரி முன்னணி பலமாக செயல்பட்டு வருகிறது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

பொருளாதார வீழ்ச்சி

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை கருத்திற்கொண்டு இடதுசாரி கொள்கை உடைய மற்றும் ஒட்டுமொத்த அனைத்து இன மக்களும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.

ரணிலை ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும்: எம்.ஆர்.எம் பைசால் வேண்டுகோள் | President Election Ranil

நாடு வீழ்ச்சியடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க தைரியமாக முன்வந்தார். அதேபோன்று அவர் குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்து, தன்னால் முடியும் என்பதை செயலில் காட்டியுள்ளார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றாலே நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர முடியும். இந்த வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கே செல்லும்.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

ரணிலின் வெற்றி

அதனால் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வது இந்த நாட்டு மக்களின் கடமையாகும். முஸ்லிம்கள் கடந்த காலங்களில் இரண்டு ஜனாதிபதியின் கீழ் வாழ்ந்து வந்த வரலாற்றைப் பார்க்கிறோம் அந்த ஆட்சியில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த நிலைமைகளை எங்களால் மறக்க முடியாது.

ரணிலை ஜனாதிபதியாக்க மக்கள் அணி திரளவேண்டும்: எம்.ஆர்.எம் பைசால் வேண்டுகோள் | President Election Ranil

நாட்டில் இனவாத்தை ஒழித்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ முடியுமான சூழலை ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என்பதை இன்று முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளனர்.

எனவே எதிர்வரும் 21ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் அணி திரளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW