புத்தளத்தில் நூற்றுக்கணக்கான தொலைபேசிகளுடன் ஒருவர் கைது

Anuradhapura Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 28, 2024 10:46 AM GMT
Laksi

Laksi

புத்தளத்தில் 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் ரக வண்டியை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்றையதினம்(27) இரவு கரம்பை சோதனைச் சாவடியில் வைத்து இடைமறித்து சோதனைக்குட்படுத்திய போதே இந்த  தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கையடக்க தொலைப்பேசிகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதிப்பத்திரமின்றி கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

பொலிஸார் விசாரணை

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் கெக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவரென தெரியவந்துள்ளது.

புத்தளத்தில் நூற்றுக்கணக்கான தொலைபேசிகளுடன் ஒருவர் கைது | Person Arrested In Puttalam With A Number Of Phone

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் அவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கெப் ரக வண்டியையும் கடற்படையினர் நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

கல்முனை தேர்தல் தொகுதியின் செயற்குழு தலைவராக ஹரீஸ் எம்.பி நியமனம்

இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW