மட்டக்களப்பில் வாகன விபத்தில் சிக்கி வயோதிப பெண் உயிரிழப்பு

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 31, 2024 02:57 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு – மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் சிறுவர் இல்லத்திற்கு செல்வதற்காக பிரதான வீதியைக் கடந்து சென்றவேளை சிறிய லொறியொன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான கனகசபை துளசிமணி என்பவரே உயிரிழந்தார்.

ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை

ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை

மேலதிக விசாரணை

இந்த விபத்தினால் உயிரிழந்த மூதாட்டியின் தலை சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் வாகன விபத்தில் சிக்கி வயோதிப பெண் உயிரிழப்பு | One Person Died In A Accident In Batticaloa

இதனையடுத்து, லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்த லொறி பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

முஸ்லிம்களின் வீட்டை உடைத்து நொறுக்கும் மோடியை சந்தித்த அனுர: இம்ரான் பகிரங்கம்

முஸ்லிம்களின் வீட்டை உடைத்து நொறுக்கும் மோடியை சந்தித்த அனுர: இம்ரான் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW