சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல் களம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Crime Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 10:04 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் தெடர்பில் கடந்த 24மணி நேரத்தில் 337 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 31ஆம் திகதியில் இருந்து இதுவரையில்  5,551 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், அதிகமான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பெறப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

முறைப்பாடுகள் 

அத்தோடு, இதுவரை பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளில் 4,929 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

சூடுபிடிக்கும் இலங்கை தேர்தல் களம்: அதிகரிக்கும் முறைப்பாடுகள் | Increasing Election Complaints

இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

புத்தளத்தில் 12 மணி வரை பதிவான வாக்குகள்: வெளியான தகவல்

புத்தளத்தில் 12 மணி வரை பதிவான வாக்குகள்: வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW