குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை! அரசாங்கத்தின் அறிவிப்பு

By Dharu Jul 22, 2025 10:29 AM GMT
Dharu

Dharu

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது திறைசேரியால் கையகப்படுத்தப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முழுக் கடனும் செலுத்தப்பட்டவுடன், எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

பொத்துவிலில் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொத்துவிலில் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொத்தக் கடன்

திறைசேரியால் கையகப்படுத்தப்பட்ட மொத்தக் கடனான ரூபாய் 884 பில்லியனில் பாதி இப்போது செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை! அரசாங்கத்தின் அறிவிப்பு | Fuel Prices To Be Reduced

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ரூபாய் 884 பில்லியன் கடனை திறைசேரி கையகப்படுத்தியுள்ளதாகவும், அந்தக் கடனை அடைக்க ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 50ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கடனில் பாதி ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது என்றும், முழு கடனும் செலுத்தப்பட்டவுடன், எரிபொருள் மீதான வரியை நீக்குவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

புத்தளத்தில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இஞ்சி பறிமுதல்

புத்தளத்தில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இஞ்சி பறிமுதல்

அட்டாளைச்சேனையில் மழைநீர் தேங்கி பிரச்சனை தீவிரம்! வலியுறுத்திய பிரதேச சபை உறுப்பினர்

அட்டாளைச்சேனையில் மழைநீர் தேங்கி பிரச்சனை தீவிரம்! வலியுறுத்திய பிரதேச சபை உறுப்பினர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW