நாட்டின் ஆயுதப் படைகள் முழுமையாக தயார்! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

United States of America Iran World
By Fathima Jan 29, 2026 10:27 AM GMT
Fathima

Fathima

ஈரானின் உயர்தர இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), எந்தவொரு இராணுவ சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாட்டின் ஆயுதப் படைகள் முழுமையாக தயாராக உள்ளன என்று ஈரானின் அரசுச் செய்தி நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது.

தாக்குதல்

IRGC-யின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அலி முகம்மத் நயீனி(Brigadier General Ali Mohammad Naeini), எதிரிகளால் மேற்கொள்ளப்படக்கூடிய பகைமையான நடவடிக்கைகள், அதில் சாத்தியமான இராணுவ தாக்குதல்களும் உட்பட, அவற்றை எதிர்கொள்ள விரிவான செயல் திட்டங்கள் தயாராக உள்ளன என்று கூறியுள்ளார்.

நாட்டின் ஆயுதப் படைகள் முழுமையாக தயார்! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Iran S Announcement Of Action Irgc

சமீப நாட்களில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக உளவியல் போரை நடத்தி வருவதாக நயீனி குற்றம் சாட்டினார்.

ஈரானிய மக்களிடையே பயத்தை பரப்ப அச்சுறுத்தலை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

IRNA தகவலின்படி, அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் எதிர்ப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும், தற்போது ஈரானிய சமூகத்தை குறிவைத்து பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம் பதற்றத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் IRGC பேச்சாளர் தெரிவித்துள்ளார்.