வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Vavuniya Sri Lanka Law and Order
By Sajithra Jul 31, 2024 02:33 AM GMT

வவுனியாவில் உள்ள 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஜுலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை, வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

வழக்கு தாக்கல்

இவற்றின் போது, சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தல், விலை அழிக்கப்பட்டிருத்தல், விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தரவாதம் வழங்காமை போன்றவை தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக மொத்தம் 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் | Case Against 60 Stores In Vavuniya

இந்நிலையில், வவுனியா நகரம், கோவில்குளம், வைரவபுளியங்குளம், குருமன்காடு, பட்டானிச்சூர், வேப்பங்குளம், நெளுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவிட்டின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

கோவிட்டின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

சட்டவிரோதமாக எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பலை கைப்பற்றிய ஈரானிய புரட்சிப் படை

சட்டவிரோதமாக எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பலை கைப்பற்றிய ஈரானிய புரட்சிப் படை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW