காத்தான்குடியில் 25 சந்தேகநபர்கள் கைது

Sri Lanka Police Batticaloa Eastern Province Crime
By Rakshana MA Oct 22, 2024 09:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5000 லீட்டர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா, புதுக்குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி உட்பட பல இடங்களில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே குறித்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடியில் 25 சந்தேகநபர்கள் கைது | 25 Arrested For Liquor Sales In Kathankudi Area

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

கசிப்பு உற்பத்தி நிலையம்

இச்சுற்றிவளைப்பின் மூலம் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் மற்றும் விநியோகம் செய்யும் இடங்கள் என பல இடங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் அதிகளவான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் 25 சந்தேகநபர்கள் கைது | 25 Arrested For Liquor Sales In Kathankudi Area

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முட்டைகளை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முட்டைகளை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW