அக்கரைப்பற்று வலய ஒலுவில் அல்-ஹம்றாவில் சமூக விஞ்ஞானப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள்
அக்கரைப்பற்று வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிகளில் பங்கேற்று, மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவாகிய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வு நேற்று (06) பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.
இங்கு, தரம் 10 மாணவி ஏ. எப்.இஸ்ரா முதலாம் இடம் பெற்றார்.
தரம் 11 மாணவர்களான ஏ.எப். இஹாதா இரண்டாம் இடத்தையும், எம்.ஐ.ஆதில் மூன்றாம் இடத்தையும் பெற்றார்கள்.
அதுபோல், தரம் 09 மாணவன் எம்.ஏ.யூசுப் மிக்தாம் மூன்றாம் இடத்தையும், தரம் 06 மாணவன் எம்.ஏ.அமார் மூன்றாம் இடத்தையும் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
மேலும், இங்கு இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், அதிபர் மற்றும் வலயத்தலைவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தனர்.



