மீண்டும் ஆரம்பமாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!

2019 Sri Lanka Easter bombings Easter Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Rakshana MA Jul 01, 2025 03:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில், முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும், குற்றவியல் கவனக்குறைவு காரணமாக கடமையைச் செய்யத் தவறியமை குறித்த விசாரணை மீண்டும் 2025 ஜூலை 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் மூவர் கொண்ட நீதிமன்றம் இதற்கான திகதியை அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று இடம்பெற்ற போதே இந்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக வழிபாட்டை படம்பிடித்த பொடி சஹ்ரான் விடுதலை

ஆன்மீக வழிபாட்டை படம்பிடித்த பொடி சஹ்ரான் விடுதலை

வழக்கு விசாரணை

முன்னதாக, மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு, ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை விடுதலை செய்ய முன்னர் உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் ஆரம்பமாகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்! | 2019 Easter Attack Trial Sri Lanka

இருப்பினும், சாட்சிகளை அழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்கான மேல் நீதிமன்றத்தின் முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதனையடுத்து, மேல்முறையீட்டை பரிசீலித்த உயர் நீதிமன்றம் சாட்சிகளை அழைத்து இறுதி முடிவை அறிவிப்பதற்கு முன்னர், புதிய விசாரணையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையிலேயே குறித்த இருவருக்கும் எதிராக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   

சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் வான்வெளியை திறந்த ஈரான்

சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் வான்வெளியை திறந்த ஈரான்

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

வாழைச்சேனை கடற்றொழிலாளியின் உயிரை பறித்த மீன்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW