காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Laksi Sep 03, 2024 10:38 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (2) ஆரையம்பதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதலின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

விசாரணை

இதன்போது, ஒருவரிடம் இருந்து ஒன்றரை கிலோகிராம் கேரள கஞ்சாவும் மற்றவரிடம் இருந்து 25,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய கையடக்க தொலைபேசியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது | 2 Persons Arrested In Batticaloa

நீண்ட நாட்களாக இப்பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை

குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW