13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்: அன்வர் எம் முஸ்தபா

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 09, 2024 07:46 AM GMT
Laksi

Laksi

நாட்டில் 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கை பல பாதுகாப்பு சவால்களை சந்திக்கும் என்பது வெளிப்படை உண்மை என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் அன்வர் எம் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணிலை விக்ரமசிங்கவை ஆதரித்து "இயலும் ஸ்ரீலங்கா" பிரச்சாரத்தில் இளைஞர்கள் மத்தியில் அவர் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை எங்களின் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி உட்பட முக்கிய முக்கிய பல அரசியல் கட்சிகள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்பதும் ஏன் நாங்கள் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்பதும் எல்லோரும் அறிந்த விடயமே.

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

பொருளாதார வீழ்ச்சி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டினை பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டு பலரும் இந்த நாட்டில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். அப்படி இருந்த சூழ்நிலையில் ஒரு தனி ஆளாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ரணில் விக்ரமசிங்க மிகக் குறுகிய காலத்தில் இந்த நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.

13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்: அன்வர் எம் முஸ்தபா | 13Th Amendment Is A Sl Security Vulnerability

எனவே எதிர்வருகின்ற ஐந்து ஆண்டுக்கு அவரை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று வாக்களிப்பது ஒரு பொருட்டாக இருந்தாலும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த இலங்கையை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார் என்பதற்காக தாய்நாட்டை நேசிக்கும் இலங்கையரான நாங்கள் அவருக்கு வாக்களிக்க கடமைப்பட்டு இருக்கிறோம்.

இது எமது தார்மீக கடமையாகும் இப்படி இருக்கின்ற நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்குக்குச் சென்று 13ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லி இருக்கின்றார்.

கடந்த காலங்களில் ஜேவிபியினுடைய வழக்கின் அடிப்படையில் இப்போது வடக்கும் கிழக்கும் பிரிந்த மாகாணங்களாக இருக்கின்றது.

அதேபோல 13 வது சீர்திருத்தத்தில் உள்ளதை போல காணி, பொலிஸ் அதிகாரத்தையும் தருவதாக அவர் வாக்குறுதி வழங்கியிருக்கிறார். இலங்கை போன்ற ஒரு சிறு நாட்டுக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுக்கின்ற போது அதை எவ்வாறு சிறந்த முடிவாக பார்க்க முடியும்.

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை

13ஆவது திருத்தம் 

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் எம்.பி போன்ற சட்டமும், இலங்கை அரசியலும் நன்றாக தெரிந்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க முன்வந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் 13 ஆம் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற சிங்கள மக்கள் அதிகம் வாழும் இலங்கையில் சாத்தியமாகுமா என்ற ஒரு கேள்வி பகிரங்கமாகவே இருக்கிறது.

13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு பாதுகாப்பு சவால்களை சந்திக்கும்: அன்வர் எம் முஸ்தபா | 13Th Amendment Is A Sl Security Vulnerability

தமிழ் மக்களை பொறுத்த வரைக்கும் அவர்களுடைய உரிமையும் இல்லை, சலுகைகளும் இல்லை என்று நிலையில் இருக்கின்றபோது ஆக குறைந்தது டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற விஜயகலா மகேஸ்வரன், மட்டக்களப்பில் இருக்கிற பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் அரசிடமிருந்து தமக்கான அபிவிருத்திகளை பெற்று மக்களுக்கு சேவை செய்து இருக்கின்றனர். என்பது ஆறுதலான விடயம்.

அதனை அவர்கள் புத்திசாலித்தனமான முன்னெடுப்புக்களினால் சாத்தியப்படுத்தினர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் சஜித் பிரேமதாசவரோடு ஒப்பந்தம் செய்துள்ள போதிலும் என்னவகையான ஒப்பந்தங்கள் செய்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வில்லை.

ஜனாதிபதி ரணில் உடையகூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களில் மக்கள் வெள்ளம் அதிகரித்திருக்கிறது. நாட்டை சிறப்பாக வழிநடத்த கூடிய ஜனாதிபதி ரணில் தான் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். என்றார்.

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

ரணில் தொடர்பில் வடக்கு - கிழக்கு மக்களின் முடிவு: சுட்டிக்காட்டும் நிமல் சிறிபால டி சில்வா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW