புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறவில்லை: விஜித ஹேரத்

Central Bank of Sri Lanka Vijitha Herath Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Oct 23, 2024 07:50 AM GMT
Laksi

Laksi

நாட்டின் வழமையான செயற்பாடுகளுக்காக புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ அரசாங்கம் கடன் பெறவில்லை.

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

புதிய பிணைமுறி பத்திரங்கள்

திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகள் காலாவதியாகும்போது புதிதாக பிணைமுறி வெளியிடுவது மத்திய வங்கியில் இடம்பெறும் வழமையான செயற்பாடாகும். அதற்கு அப்பால் புதிதாக வேறு எங்கிருந்தும் கடன் பெறவில்லை.

புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறவில்லை: விஜித ஹேரத் | We Have Not Borrowed Any New Country Herath

திறைசேரியும் இதுதொடர்பில் விளக்கமளித்திருந்தது. பிணைமுறிகளுக்கான காலம் முடிவுறும்போது புதிய பிணைமுறி பத்திரங்கள் வெளியிடப்படும். இது ஒரு வட்டச் செயற்பாட்டை போன்று எதிர்காலத்திலும் இடம்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

தேங்காய் விற்பனைக்கு இன்று முதல் புதிய திட்டம்

தேங்காய் விற்பனைக்கு இன்று முதல் புதிய திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW