மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வான்
மட்டக்களப்பு (Batticaloa) நகரில் உள்ள பாடுமீன் வீதியில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை ஒரு கே.டி.எச் ரக வான் திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த தீப்பற்றிய சம்பவமானது, அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன்போது, சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவ பின்னணி
இருப்பினும், அந்த வான் முற்றாக எரிந்து மருத்துவிக்க முடியாத வகையில் சேதமடைந்துள்ளது.
இந்த கே.டி.எச் ரக வானில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இருந்து வந்தவர்கள் கடந்த இரவு மட்டக்களப்பிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
வீட்டின் முன் வானைக் விட்டு, இரவு உறங்க சென்றிருந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு தீப்பற்றிய காரணம் தெளிவாக தெரியாத நிலையில், இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |