ஏறாவூரில் கோர விபத்து : 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை – களுவங்கேணி வீதியில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட கோர வாகன விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, வந்தாறுமூலையிலிருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, இரண்டாவது மைல் கல் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழப்புகள்
விபத்தில் உயிரிழந்தோர், ஜெந்திரகுமார் சஞ்சய் – சின்ன ஊறணி, கருவப்பங்கேணி, இரண்டாம் குறுக்குத் தெரு சிறுமி: பிரதீபன் தவஸ்வாணி (15 வயது) – கருவப்பங்கேணி, நாவலர் வீதி இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் பாலச்சந்திரன் மோகனகாந்தி – உயிரிழந்த சிறுமியின் தாயார் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது கணவர் வெளிநாட்டில் இருக்கின்ற நிலையில், வீட்டுப் பன்றிப் பண்ணையை பார்வையிடுவதற்காக இன்று அதிகாலை காரில் பயணித்த போது இவ்விபத்து ஏற்பட்டது என கூறப்படுகிறது.
உயிரிழந்தோரின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் வேகமாக வாகனத்தை ஓட்டும் தீவிரத்தனத்தின் மோசமான விளைவை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


