மட்டக்களப்பில் 16 வயது சிறுமி மாயம் : சுவிஸ்லாந்திலிருந்து வந்த நபர் மீது சந்தேகம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பாக, அந்த சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாகப் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், சுவிஸ்லாந்திலிருந்து வந்த 40 வயது நபர் ஒருவரே இந்தச் சிறுமியுடன் தொடர்பு கொண்டு, அவரை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, பின்னர் மனைவியின் நகைகளை எடுத்துச் சென்று சுவிஸ்லாந்து சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
அங்கு அவர் பணம் சம்பாதித்தும், மனைவிக்கு அனுப்பாமல், பல பெண்களுடன் தொடர்பு வைத்து அவர்களுக்காகவே செலவு செய்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட மனைவி, அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். சுவிஸிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த குறித்த நபர், தன் மனைவியை தவிர்த்து, அவளது அக்காவின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.
அங்கு இருந்த அக்காவின் 16 வயது மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு, அவளை அழைத்து சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.
சிறுமியின் தாயின் தகவலின் அடிப்படையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |