தொடரும் தாக்குதல் : ஈரானில் உள்ள 37 இலங்கையர்களின் கதி.!

Sri Lanka World Iran-Israel War
By Rakshana MA Jun 22, 2025 04:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

வெளியுறவு அமைச்சு மத்திய கிழக்கில் தொடர்ந்து தீவிரமடைந்துவரும் போர் சூழ்நிலையின் பின்னணியில், ஈரானில் (Iran) வசித்து வரும் இலங்கையர்கள் குறித்து இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஈரானில் மொத்தம் 41 இலங்கையர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை நான்கு பேர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், 37 பேர் இன்னும் ஈரானில் தங்கியிருக்கின்றனர் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில், ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஐந்து அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

மாணவர்களின் சுமைகளை குறைப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

மாணவர்களின் சுமைகளை குறைப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

நாட்டைவிட்டு புறப்படவுள்ளோர்

அத்துடன், ஈரானில் உள்ள இலங்கையர்களில் நான்கு பேர் நாளை (23) துருக்கி எல்லை வழியாக வெளியேறும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் தாக்குதல் : ஈரானில் உள்ள 37 இலங்கையர்களின் கதி.! | Iran Sri Lanka Evacuation

முன்னதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), ஈரானில் சுமார் 35 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களில் எட்டு பேர் ஈரான் பிரஜைகளுடன் திருமணமாகி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரானை தாக்கிய அமெரிக்கா..! அதிகரிக்கும் போர் பதற்றம்

ஈரானை தாக்கிய அமெரிக்கா..! அதிகரிக்கும் போர் பதற்றம்

ஈரானில் உளவு வேலை பார்த்த இஸ்ரேலியர்கள் அதிரடியாக கைது

ஈரானில் உளவு வேலை பார்த்த இஸ்ரேலியர்கள் அதிரடியாக கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW