அமெரிக்காவை பழி தீர்கக களமிறங்கும் ஈரான்..! சரமாரி தாக்குதலுக்குள்ளாகும் இஸ்ரேல்
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பழிவாங்க, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானின் இந்த தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தகவல்கலை மேற்கொள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பழிதீர்க்கும் ஈரான்
ஏவுகணை தாக்குதல் தொடர்வதற்கு முன்னர் இஸ்ரேலில் உள்ள சைரன் ஒலிக்கும். ஆனால், சைரன் ஒலிப்பதற்கு முன்னரே இந்த முறை தாக்குதல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முதல் கட்ட ஏவுகணை தாக்குதலை முடித்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்கியிருப்பதாகவும் ஈரானிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ben Gurian Airport,Biological Investigation Centre, Command Centre of IDF என மூன்று முக்கியமான இடங்களை ஈரான் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தாக்குதல்
இன்று அதிகாலை, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் என மூன்று அணுசக்தி மையங்களின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியிருக்கிறது.
தாக்குதலில் அனைத்து அணுசக்தி மையங்களும் அழிக்கப்பட்டுவிட்டது என்று டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், தாக்குதல் வெற்றிப்பெறவில்லை என்று ஈரான் கூறியிருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |