கொட்டித்தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (23.06.2025) வளிமண்டலவியல் திணைக்களத்தினால், வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், சில மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
[UGUAEQW ]
மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
அதன்படி, சப்ரகமுவ மாகாணம் மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் இந்த பகுதிகளில் பலதடவைகள் மழை ஏற்படக்கூடும் என்றும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், மழையுடனான வானிலை காரணமாக, சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் இதன்போது, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |