கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடிய வெளிநாட்டு தூதுவர்
Sri Lankan Peoples
Eastern Province
United Arab Emirates
By Rakshana MA
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு திருகோணமலையில் (Trincomalee) உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தினை முன்னேற்றுவதற்கான முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
முக்கிய கலந்துரையாடல்
குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலா, மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகியவற்றை மேம்படுத்தத்தேவையான முதலீடுகள் மற்றும் மேம்படுத்துவது குறித்து திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |