நாட்டின் பல இடங்களில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 22, 2025 03:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல இடங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய நாளுக்கான (22) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

அத்துடன், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வானிலை மாற்றம் 

இந்த நிலையில், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பல இடங்களில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம் | Today Sri Lanka Weather Update

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இந்த நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து சஜித் விடுத்துள்ள கோரிக்கை

நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து சஜித் விடுத்துள்ள கோரிக்கை

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை : பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை : பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW