மட்டக்களப்பை உலுக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
மட்டக்களப்பில் வர்த்தக நிலையமொன்றில் வாள்வெட்டுக் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றுமுன் தினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஐயங்கேணியை சேர்ந்த வாள்வெட்டுக் குழுவொன்று மேற்படி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் வர்த்தக நிலையத்தில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |