நாட்டில் பல இடங்களில் பலத்த காற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Aug 19, 2025 03:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

இன்று (19) வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை காதி நீதிபதி இலஞ்ச வழக்கில் கைது

கல்முனை காதி நீதிபதி இலஞ்ச வழக்கில் கைது

பலத்த காற்று எச்சரிக்கை

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். 

நாட்டில் பல இடங்களில் பலத்த காற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Weather Update Today

சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம் அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசுக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சம்மாந்துறையில் புதிய உதவி பிரதேச செயலாளர் பொறுப்பேற்பு

சம்மாந்துறையில் புதிய உதவி பிரதேச செயலாளர் பொறுப்பேற்பு

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW