வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Aug 17, 2025 03:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இன்று (17) திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 4,712 சந்தேகநபர்கள் கைது!

நாட்டில் இதுவரை 4,712 சந்தேகநபர்கள் கைது!

 பலத்த மழை

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | Sri Lanka Weather Forecast Today

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலரின் அபார சாதனை!

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலரின் அபார சாதனை!

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

தமிழரசுக் கட்சி ஹர்த்தாலுக்கு உதவி கேட்க முதல் முஸ்லிம் விரோத செயல்களை கைவிட வேண்டும்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW