அம்பாறையில் மீன் பிடிக்க சென்று முதலையிடம் சிக்கிய பெண்

Ampara Climate Change Eastern Province Weather
By Laksi Oct 15, 2024 11:32 AM GMT
Laksi

Laksi

அம்பாறையில் மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் நேற்று (14) மாலை இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணையே முதலை இவ்வாறு இழுத்துச் சென்றுள்ளதுடன் இதுவரை அப்பெண்ணோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

கிழக்கு ஆளுநரின் பிரத்தியேக ஆளணியில் முஸ்லிம்கள் இல்லை: இம்ரான் மகரூப் பகிரங்கம்

பொது மக்கள் கோரிக்கை

இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது.

அம்பாறையில் மீன் பிடிக்க சென்று முதலையிடம் சிக்கிய பெண் | Search Operation For Woman Dragged By Crocodile

காரைதீவு – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள், அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள் ,சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன சபையினர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் பரவல்

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல்

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் கோரல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery