முச்சக்கரவண்டியிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் !

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Sep 10, 2024 09:55 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனை தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதியின் தாய், முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது முச்சக்கரவண்டியின் பின் பகுதியில் இருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

முச்சக்கரவண்டியின் சாரதி 

முச்சக்கரவண்டியின் சாரதி அதே தோட்டத்தில் வசிப்பவர் எனவும் அவர் முச்சக்கரவண்டியில் பயணமொன்றை மேற்கொண்டு இன்று (10) காலை தனது வீட்டிற்கு வந்து நிறுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அகரபத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் ! | Rescue Of Body Of An Infant Rotting In A Tricycle

சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து நீதவானின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அக்கரபத்தனை பொலிஸ் அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் விரைவில் தீர்மானம்

பாடசாலை விடுமுறை தொடர்பில் விரைவில் தீர்மானம்

சஜித்தின் பிரசார கூட்டத்தில் விபத்து: 7 பேர் காயம்

சஜித்தின் பிரசார கூட்டத்தில் விபத்து: 7 பேர் காயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW