யாழ் மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியானது!

Jaffna Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 22, 2024 10:04 AM GMT
Laksi

Laksi

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் யாழ் மாவட்டத்தின் தேர்தல் தொகுதிக்கான இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 121,177 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய பா. அரியநேத்திரன் 116,688 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 84, 558 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமாரதிஸாநாயக்க 27,086 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

தபால் மூல வாக்கு முடிவுகள்

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,277வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,640 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4,207 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,250 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.     

யாழ்.தொகுதி முடிவுகள்

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 7,494 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.    

திருகோணமலை மாவட்டத்தில் முன்னிலையில் சஜித்

திருகோணமலை மாவட்டத்தில் முன்னிலையில் சஜித்

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் அநுர

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் அநுர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW