கிண்ணியாவில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் உடன் Serendip foundation இன் பணிப்பாளர் ஜமால்தீன் அமானுல்லாஹ் சந்தித்து கிண்ணியா எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்தார்.
இச்சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தில் இன்று (03) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்துவதற்காக தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தூதுவர் உறுதிமொழி வழங்கினார்.
மக்களுக்கான உதவி
மேலும், இந்நிகழ்வில் Serendip foundation இன் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜமால்தீன் அன்வருல்லாஹ் மற்றும் விவசாய உத்தியோகத்தர் முகமட் நிஹாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Serendip foundation முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மர்ரஹூம் ஜமால்தீன் ஆசிரியரினால் உறுவாக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை 25 வருடமாக முன்னெடுத்து வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |