திருகோணமலையில் ஒருவர் அடித்து கொலை

Trincomalee Sri Lankan Peoples Death
By H. A. Roshan Aug 03, 2025 11:30 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலை (Trincomalee) உப்பு வெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை சந்தியில் வைத்து ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அலஸ்தோட்டத்தில் ஒரு இசை நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதில் இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன் விளைவாக மரத்தடி பகுதியை சேர்ந்த (33 வயது) 3ம் கட்டை சந்தியில் நள்ளிரவு 3.00மணியளவில் அடித்து கொலை செய்யப்பட்டதாக சீசீ டீவி கானொளி மூலம் தெரியவந்துள்ளது.

வரி வருமானம் தொடர்பான PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு

வரி வருமானம் தொடர்பான PIN இலக்கத்தின் காலம் நீட்டிப்பு

கொலை சம்பவம் 

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உப்பு வெளி பொலிஸார் ஒருவரையும், திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் ஐவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஒருவர் அடித்து கொலை | Man Beaten To Death In Trincomalee Clash

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கு வந்து குவிந்த சுற்றுலாப்பயணிகள்

நாட்டுக்கு வந்து குவிந்த சுற்றுலாப்பயணிகள்

மூதூரில் மோட்டார் குண்டு மீட்பு

மூதூரில் மோட்டார் குண்டு மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW