குறைந்தது மக்களின் சிரமம்: நடைமுறையாகும் புதிய திட்டம்

Government Of Sri Lanka Sri Lankan Peoples GovPay
By Dilakshan Jul 14, 2025 11:20 AM GMT
Dilakshan

Dilakshan

செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தபடும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர்கள் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்துள்ளார்.

GovPay மற்றும் வரவிருக்கும் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்துவது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அது குறித்து ஹர்ஷ புரசிங்க மேலும் கூறுகையில், “சில வாரங்களுக்கு முன்பு, எங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தது. எனவே, இந்த மாதம் முதல் நாடு முழுவதும் அபராதங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் முறையை செயல்படுத்தத் தொடங்குவோம்.

திருகோணமலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

திருகோணமலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

நேரடி அபராதம் 

இந்த மாத இறுதிக்குள் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள காவல் நிலையங்களை இணைப்பதன் மூலம் முதல் கட்டத்தில் இதை அறிமுகப்படுத்தவும் நாங்கள் நம்புகிறோம்.

குறைந்தது மக்களின் சிரமம்: நடைமுறையாகும் புதிய திட்டம் | Online Fine Payment Facility From September

அதன் பிறகு, மிக விரைவான திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் உள்ளடக்கிய நேரடியாக அபராதம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவோம். நாங்கள் govpay ஐ அறிமுகப்படுத்தியபோது, அதிக செயலிகள் தயாராக இல்லை.

இப்போது, செயலிகள் தயாராக உள்ளன. பின்னணி செயலிகள் தயாராக உள்ளன, எனவே நீங்கள் விரும்பும் செயலியைப் பயன்படுத்தி, உங்கள் விருப்பப்படி ஒரு வங்கியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தலாம்." என்றார்.

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர..!

முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW