நபிவழி மருத்துவம் - வெங்காயம்

World
By Fathima Jun 18, 2025 04:44 AM GMT
Fathima

Fathima

அபூதாவூத்(ரஹ்) அவர்கள் தன் சுனன் எனும் நூலில் பதிவு செய்துள்ளதாவது, அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் வெங்காயம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட கடைசி உணவில் வெங்காயம் இருந்தது என கூறினார்கள்.

மேலும் புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது: வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டவர் மஸ்ஜிதுக்குள் நுழைவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

வெங்காயம் மூன்றாம் நிலை சூடானதாகும். அதில் மிகுதியான ஈரத்தன்மை உள்ளது. தண்ணீர் மாற்றமடைதல் மூலம் பயனளிக்கும். இது நச்சு வாடையை தடுக்கும். ஆசையை தூண்டும். இரைப்பைக்கு வலுசேர்க்கம், போக ஆற்றலை தூண்டும், விந்தணுவை மிகுதியாக்கும்.

நபிவழி மருத்துவம் - வெங்காயம் | Onion Benefits In Islam In Tamil

உடலின் நிறத்தை அழகாக்கும். சளியை போக்கும், இரைப்பையை சுத்தமாக்கும் அதன் விதை தோல் நோயை நீக்கும், முடி உதிர்தல் நோயை சுற்றியுள்ள இடத்தில் வெங்காயத்தை தேய்த்து விட்டால் மிகுந்த பயனளிக்கும்.

வெங்காயத்தை உப்போடு சேர்த்து தேய்த்தால் கழலை, மறு ஆகியவை முற்றிலுமாக நீங்கிவிடும். வயிற்றுப்போக்கு மருந்தை குடித்தவர் வெங்காயத்தை முகர்ந்தால் அவருக்கு வாந்தி வருவதும் நோயும் நின்றுவிடும், அதன் மருந்தின் வாடையையும் அது நீக்கிவிடும். 

வானங்கள் பூமிகளை விட கனமுடைய திக்ரு

வானங்கள் பூமிகளை விட கனமுடைய திக்ரு


இதன் நீரை நுகர்ந்தால் தலையை சுத்தப்படுத்தி தலைவலியை நீக்கிவிடும். காது கேட்டல் குறைபாடு, சீழ் வடிதல், காதிரைச்சல் காதுகளில் வடியக்கூடிய நீர் ஆகிய குறைபாடுகளுக்காக காதில் அதன் சாற்றை சொட்டு சொட்டாக விட வேண்டும்.

கண்களில் வடியக்கூடிய நீரைத் தடுக்க வெங்காய விதையை தேனுடன்கலந்து கண்ணின் வெள்ளை விழியில் சுர்மாவை போல் தடவினால் மிகுந்த பயனளிக்கும், அதை வேகவைத்து மிகுதியாக உணவுப்பொருளாக உண்பது மஞ்சள் காமாலை, இருமல், நெஞ்சத்தின் கடினத்தன்மை ஆகியவற்றிற்கு மிகுந்த பயனளிப்பதோடு, சிறுநீரை பிரியச்செய்து உடலின் இயல்பை மென்மையாக்குகிறது.

நாய்க்கடி பட்ட இடத்தில் வெங்காய சாற்றை பிழிந்துவிட்டு, உப்பையும் சிறு சூரல் வகை இலையையும் சேர்த்து தடவினால் நாய்க்கடி குணமாகும்.

நபிவழி மருத்துவம் - வெங்காயம் | Onion Benefits In Islam In Tamil

இதன் தீமைகள்: அது ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது. தலைவலியையும் உண்டாக்குகிறது. வாய்வுத் தொல்லையை ஏற்படுத்துகிறது. பார்வையை மங்கச்செய்கிறது. இதை மிகுதியாக சாப்பிடுவது மறதியை ஏற்படுத்துகிறது.

அறிவை கெடுக்கிறது. வாய்வாடையை மாற்றிவிடுகிறது. அண்டையில் அமர்வோருக்கும் வானவர்களுக்கும் தொல்லையை ஏற்படுத்துகிறது.

சமைப்பதன் மூலம் இதன் வீரியத்தை நீக்கிவிடுவதால் இந்த தீங்குகளெல்லாம் நீங்கிவிடுகின்றன.

வெங்காயத்தையும் பூண்டையோடும் சாப்பிடுவோர் சமைத்து அவற்றின் (வாடையின்) வீரியத்தை நீக்கிவிடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் (நூல்: முஸ்லிம்)

வெங்காயத்தை சாப்பிட்டுவிட்டு சிறு சூரல் வகை(Wall-rue)இலையை மெல்லுவதால் அதன் வாடை நீங்கிவிடும்.

இலங்கையில் இனி குழந்தைகளுக்கும் மாதாந்தர கொடுப்பனவு

இலங்கையில் இனி குழந்தைகளுக்கும் மாதாந்தர கொடுப்பனவு

2029 சாதாரண தரப் பரீட்சை : புதிய பாடத்திட்டம்

2029 சாதாரண தரப் பரீட்சை : புதிய பாடத்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW