இலங்கையில் இனி குழந்தைகளுக்கும் மாதாந்தர கொடுப்பனவு
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் தனியார் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் இது தொடர்பில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றிற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
சிறுவர்களுக்கான கொடுப்பனவு
அதன் பிரகாரம் அவர்களின் எதிர்காலத்திற்காக சேமிக்கப்படும் ஒரு பகுதியை பராமரிப்பு நிலையங்களிலும் வீதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை மாதாந்தம் ரூ.5,000 வழங்கும்.
அவற்றில் மூன்றாயிரம் ரூபாவை அவர்கள் தங்கி வாழும் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கவும் மிகுதி இரண்டாயிரம் ரூபாவை சிறுவர்களின் எதிர்கால நலன் கருதி சேமிப்புத் திட்டம் ஒன்றில் வைப்புச் செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக தேசிய சேமிப்பு வங்கியின் ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |