களுவாஞ்சிக்குடியில் எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்
By Rakshana MA
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
ஈரான் - இஸ்ரேல் மோதலை தொடர்ந்து தற்போது எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு
இதன் காரணமாக, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று தாம் எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் இவ்வாறு எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |