வவுனியாவில் தொடருந்து மோதி பெண்ணொருவர் பலி

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Sep 10, 2024 10:13 PM GMT
Harrish

Harrish

வவுனியா - ஓமந்தையில் தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(10.09.2024) இடம்பெற்றுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் முன்னெடுப்பு

சம்மாந்துறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் முன்னெடுப்பு


பொலிஸ் விசாரணை

யாழில் இருந்து வவுனியா நோக்கி நேற்று மாலை பயணித்த தொடருந்தானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது தொடருந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது தொடருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் தொடருந்து மோதி பெண்ணொருவர் பலி | One Lady Died Train Accident In Vavuniya

அத்துடன், உயிரிழந்த பெண் சுமார் 35 - 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மூவின மக்களும் நாட்டிற்கு பொருத்தமான ஒருவரையே தேடுகின்றனர் : ஹரீஸ் எம்.பி

மூவின மக்களும் நாட்டிற்கு பொருத்தமான ஒருவரையே தேடுகின்றனர் : ஹரீஸ் எம்.பி

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு