அம்பாறையில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்கேற்பு

Ampara Anura Dissanayake Eastern Province
By Laksi Sep 14, 2024 12:08 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியினரால் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதில் மாபெரும் பிரசார கூட்டம் நடைபெற்றுள்ளது.

நேற்றையதினம் (13) நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக இவ்வாறு அதிகளவான மக்கள் இப்பிரசார கூட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பிரசார கூட்டங்கள்

இதன் போது ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ உட்பட கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அம்பாறையில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்கேற்பு | Npp Election Campaign Meeting In Sainthamaruthu

மேலும் இது தவிர அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, அம்பாறை நகரப் பகுதிகளிலும் இவ்வாறான பிரசார கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றதுடன் அதிகளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்

புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery