நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு!

Sri Lanka Sri Lankan Peoples TN Weather Weather Floods In Sri Lanka
By Rakshana MA Nov 24, 2024 10:44 AM GMT

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக நில்வலா கங்கையின் நீர் மட்டம் கடுமையாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மருதமுனை வைத்தியசாலைக்கு புதிய உபகரணங்கள் அன்பளிப்பு : அபிவிருத்திக் குழு கூட்டம்

மருதமுனை வைத்தியசாலைக்கு புதிய உபகரணங்கள் அன்பளிப்பு : அபிவிருத்திக் குழு கூட்டம்

வெள்ளப் பெருக்கு 

மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவுக்கு நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்ந்தும் நில்வலா ஆற்றின் நீர் மட்டம் தலகஹகொட பிரதேசத்தில் சிறு வெள்ள மட்டத்தை கடந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு! | Nilwala River Water Levels

எவ்வாறாயினும், பானதுகம பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த சிறு வெள்ளம் தற்போது குறைந்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சார சபை ஊழியர்களுக்கான புதிய கொடுப்பனவு அறிவிப்பு

மின்சார சபை ஊழியர்களுக்கான புதிய கொடுப்பனவு அறிவிப்பு

முஸ்லிம் அமைச்சரை தவிர்க்கும் அரசாங்கம் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர்

முஸ்லிம் அமைச்சரை தவிர்க்கும் அரசாங்கம் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW