திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் பலி

Sri Lanka Police Trincomalee Eastern Province
By Laksi Oct 12, 2024 09:40 AM GMT
Laksi

Laksi

திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது திருகோணமலை - சீனக்குடா பகுதியில் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில், சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

மேலதிக விசாரணை

கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் இவர்கள் இருவரும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் பலி | Mother And Son Killed In Trinco Train Accident

இந்த நிலையில், தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு தொடருந்து பாதையை கடக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் வெளியான தகவல்

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு தொடர்பில் அநுர பணிப்புரை

ஓய்வூதியதாரர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு தொடர்பில் அநுர பணிப்புரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW