ஜூலை முதல் பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

Sri Lanka Srilanka Bus
By Dev Jun 28, 2025 09:26 AM GMT
Dev

Dev

எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து ஓட்டுநர்கள் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு ஆசனப் பட்டி அணியாமல் பேருந்து செலுத்தும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத்தின் தலைவர் சந்திரபால தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன ஓட்டுநர்கள் ஆசனப் பட்டி அணிவது தொடர்பான சட்டம் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 முதலே நடைமுறைக்கு வந்துள்ளது.

ஓட்டமாவடியில் நெகிழ்ச்சியூட்டும் நிக்காஹ் நிகழ்வு !

ஓட்டமாவடியில் நெகிழ்ச்சியூட்டும் நிக்காஹ் நிகழ்வு !

சாலை விபத்துக்கள்

வர்த்தமானி அறிவிப்பு மூலம் சட்டம் அறிவிக்கப்பட்ட போதிலும், பல ஓட்டுநர்கள் குறித்த சட்டத்தை பின்பற்றவில்லை.

ஜூலை முதல் பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை | Mandatory Practice On Buses From July Sri Lanka

அத்துடன், சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு, ஜூலை 1 முதல் ஆசனப் பட்டி சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள்

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW