ஓட்டமாவடியில் நெகிழ்ச்சியூட்டும் நிக்காஹ் நிகழ்வு !

Batticaloa Marriage Married Mosque
By Rakshana MA Jun 28, 2025 07:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நேற்று (27) அஸர் தொழுகைக்கு பின்னர் நடைபெற்ற நிக்காஹ் நிகழ்வில், அனைவரின் மனதையும் நெகிழச் செய்த ஒரு சம்பவம் இடம்பெற்றது.

நவீன கால திருமணங்களில் விலை உயர்ந்த பரிசுகள், வாகனங்கள், மிருகங்கள் என பல ஆடம்பரங்கள் இடம்பெறும் நிலையில், இஸ்மத் இலாஹி எனும் மணமகன், தன் கைகளால் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட புனித அல்-குர்ஆன் பிரதியை தனது மணமகளுக்கான மஹராக வழங்கியுள்ளார்.

மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஆன்மீக திருமணம்

இஸ்மத் இலாஹி, பொலன்னறுவை மஜீதியா அறபுக்கல்லூரியில் கல்வி பயின்றவர். அவரது மணமகளான பாத்திமா ஸஹ்ரா, ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா அறபுக்கல்லூரியில் கல்வி பயின்றவர்.

ஓட்டமாவடியில் நெகிழ்ச்சியூட்டும் நிக்காஹ் நிகழ்வு ! | Quran Gifted As Mahr In Wedding

இந்நிகிழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி திருமண உரையை நிகழ்த்தி, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

உரையின் போது அவர், “மணமகனின் கைகளால் எழுதப்பட்ட புனித குர்ஆன் பிரதியை மஹராக வழங்கியுள்ளார்” என்று உரையாற்றியதோடு, அந்த முஸ்ஹஃப் பிரதியை சபையில் காண்பித்ததும், நிகழ்வில் இருந்த அனைவரும் மிகுந்த உணர்வோடு அந்த தருணத்தை நினைவாக எடுத்துக் கொண்டனர்.

இந்த அபூர்வமான நிகழ்வு அனைவரது இதயத்தையும் தொட்டதுடன், திருமண விழா ஒரு ஆன்மீக அழகு மிக்க நிகழ்வாக மாறியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அல்ஹம்துலில்லாஹ்!  

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள்

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள்

கடற்கரை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

கடற்கரை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery