மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள்

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Eastern Province Drugs
By Rakshana MA Jun 28, 2025 05:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி மற்றும் மண்முனை பிரதேசங்களில் இன்று அதிகாலை, சிறப்பு அதிரடிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிபரின் பணிப்புரையின் பேரில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 50 பொலிஸாரும், 6 விசேட அதிரடிப்படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தப்பமுடியாத ஆபத்தில் சிக்கியுள்ள பிள்ளையான்..! இன்னுமொரு சித்திரவதை முகாம்..

தப்பமுடியாத ஆபத்தில் சிக்கியுள்ள பிள்ளையான்..! இன்னுமொரு சித்திரவதை முகாம்..

விசேட சுற்றிவளைப்பு

பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட இவர்கள், முக்கிய இடங்களை குறிவைத்து சோதனைகள் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள் | Drug Bust Arrests In Batticaloa

இந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக பயன்படுத்தப்படக்கூடிய வாகன இலக்கதகடுகள், பாதுகாப்பு தலைக்கவசங்கள், மற்றும் பக்கக் கண்ணாடிகள் இல்லாத 9 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையில் வைத்தியசாலைக்குள் புகுந்த இராட்சத முதலை

அம்பாறையில் வைத்தியசாலைக்குள் புகுந்த இராட்சத முதலை

போதைப்பொருளுடன் கைது

மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 பேரும், பிடியாணையுடன் தேடப்பட்டு வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் விசேட சுற்றிவளைப்பு : சிக்கிய 12 சந்தேக நபர்கள் | Drug Bust Arrests In Batticaloa

இதற்கிடையில், ஐஸ் போதைப்பொருளுடன் 2 பேர் மற்றும் கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 12 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவங்களைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு குறித்து வெளியான தகவல்

கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு குறித்து வெளியான தகவல்

அரச சேவையில் 30,000 புதிய பதவிகள்!

அரச சேவையில் 30,000 புதிய பதவிகள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW