அரச சேவையில் 30,000 புதிய பதவிகள்!

Government Employee Government Of Sri Lanka Sri Lanka Government Gazette Sri Lanka Government
By Rakshana MA Jun 26, 2025 07:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரச சேவையில் 30,000 புதிய பதவிகளை நிரப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், அனைத்து பதவிகளும் முழுமையாக போட்டித் தேர்வுகள் மூலம் தான் நிரப்பப்படும் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

அரச வேலைவாய்ப்பு

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொது நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை மற்றும் அறிவியல் சேவை உள்ளிட்ட பல்வேறு பணியாளர் மட்டப் பணிகளுக்கு தகுதியான நபர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் 30,000 புதிய பதவிகள்! | Public Service Recruitment Srilanka

மேலும், முகாமைத்துவ உதவியாளர்கள், கிராம அலுவலர்கள் போன்ற அத்தியாவசிய வெற்றிடங்களும் இந்நடவடிக்கையின் கீழ் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.

அதேவேளை, சுமார் ஏழு ஆண்டுகளில் நடைபெறவுள்ள மிகப்பெரிய அளவிலான பொதுத்துறை ஆட்சேர்ப்பாக இந்த நடவடிக்கை முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசு வேலைக்காக எதிர்பார்க்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு வசதி வாய்ப்பு எனக் கருதப்படுகிறது.

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மனைவியின் முனைவர் பட்ட விழா : சர்ச்சைக்குள் சிக்கிய ரணில்

மனைவியின் முனைவர் பட்ட விழா : சர்ச்சைக்குள் சிக்கிய ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW