சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து வெளியான அறிவிப்பு
2024 (2025) கல்வியாண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும்.
குறித்த விடயத்தினை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும், "பரீட்சை பெறுபேறுகள் வெளியானது" எனும் தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும், தற்சமயம் எந்தவொரு அசல் வெளியீடும் நடைபெறவில்லையெனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
அதே நேரத்தில், 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள், 2025 ஜூன் 26 முதல் ஜூலை 21 வரை நிகழ்நிலை முறையில் (Online) பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், பரீட்சை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மட்டுமே கவனிக்க வேண்டுமெனவும், தவறான சமூக ஊடக தகவல்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |