வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Ampara Sri Lanka Police Investigation Eastern Province Crime
By Laksi Sep 25, 2024 09:07 AM GMT
Laksi

Laksi

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் பணிப்புரையின் கீழ் மொனராகலை, போஹிட்டிய, வெடிகும்புர பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மொனராகலை- வெடிகும்புர பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

மேலதிக விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி, 02 தோட்டாக்கள், ஈயப் பந்துகள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது | Man Was Arrested With A Foreign Made Gun

மேலும், கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொனராகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் : பிரத்தியேக வகுப்பாசிரியர் கைது

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் : பிரத்தியேக வகுப்பாசிரியர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW