மட்டக்களப்பில் ஆற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் பலி

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Aug 25, 2024 01:37 PM GMT
Laksi

Laksi

 மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது பழுகாமம், பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள பாலத்தில் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 3 பேர் பாலத்தில் வைத்து அதனை நிறுத்த முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வரி விவரங்களும் நாளை வெளியாகும்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அனைத்து வரி விவரங்களும் நாளை வெளியாகும்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உயிரிழப்பு

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பில் ஆற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் பலி | Man Dies After Falling Into River With Motorcycle

குறித்த நபர் நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பழுகாமத்தில் இருந்து பெரிய போரதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளார்.

பல நோய்கள் பரவும் அபாயம்: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

பல நோய்கள் பரவும் அபாயம்: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

இருவர் கைது

இதன்போது ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது குறித்த நபர் பாலத்தில் இருந்து தவறி ஆற்றினுள் விழுந்துள்ளார்.

மட்டக்களப்பில் ஆற்றுக்குள் தவறி விழுந்து ஒருவர் பலி | Man Dies After Falling Into River With Motorcycle

இதைனையடுத்து பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன், மோட்டார் சைக்கிளையும் உயிரிழந்த நபரையும் மீட்டுள்ளனர்.

மேலும், அவருடன் பயணித்த இரு நண்பர்களையும் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW