மூதூரில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..!

Trincomalee Sri Lanka Police Investigation Eastern Province Crime
By Laksi Sep 09, 2024 11:52 AM GMT
Laksi

Laksi

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் -அல்லைநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் ஆலோசனையின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் இன்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம் பயிலுனர்கள் தொழுகைக்கு செல்வதற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் பயிலுனர்கள் தொழுகைக்கு செல்வதற்கு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கைது

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஐஸ் 6 கிராம் 50 மில்லி கிராமும்,கஞ்சா 5 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மூதூரில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது..! | Man Arrested With Ice Drug In Muthur

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் விரைவில் தீர்மானம்

பாடசாலை விடுமுறை தொடர்பில் விரைவில் தீர்மானம்

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு: வெளியான தகவல்

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு: வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW