இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் நிலை! வெளியான அறிக்கை

Ministry of Education Sri Lankan Schools Education
By Rakshana MA Mar 19, 2025 04:42 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 சதவீதமான பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் 2024ஆம் ஆண்டு உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தும் சில விவசாயிகள் : வெளியான தகவல்

உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தும் சில விவசாயிகள் : வெளியான தகவல்

ஆய்வு

கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் நிலை! வெளியான அறிக்கை | Lanka Students Suspend Education

அத்தோடு இந்த சுகாதார ஆய்வறிக்கையானது, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

அம்பாறை மாவட்ட அரசி ஆலை உரிமையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW