உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தும் சில விவசாயிகள் : வெளியான தகவல்
சில விவசாயிகளின் உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
நிதி மோசடி
அந்தவகையில், அனுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம்155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் ரூ.2,934,310 திருடப்பட்டுள்ளது.
எனவே, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |